Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

புத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

புத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

புத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ADDED : மே 15, 2025 01:28 AM


Google News
ஆத்துார், ஆத்துார், மஞ்சினி புத்துமாரியம்மன் கோவிலில், கடந்த, 6ல் சித்திரை திருவிழா, அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

நேற்று காலை, 9:00 மணிக்கு, பொங்கல், மாவிளக்கு பூஜை நடந்தது. மதியம், காவடி ஆட்டம், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்து திரளான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மாலை, 5:00 மணிக்கு, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியபடியும், கரகம் எடுத்து வந்தும், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி மூலவர் புத்துமாரியம்மன், வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us