ADDED : மே 28, 2025 01:35 AM
சேலம், சேலம், சூரமங்கலம், காசக்காரனுாரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 33. தனியார் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவருக்கு மனைவி கலையரசி, ஒரு குழந்தை உள்ளது.
கடந்த, 25 இரவு பணி முடிந்து, சதீஷ்குமார் வீட்டுக்கு வந்தபோது, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மறுநாள் காலை, சதீஷ்குமார், சமையல் அறையில் இறந்து கிடந்தார். கலையரசி புகார்படி, சூரமங்கலம் போலீசார், உடலை கைப்பற்றி, அவர் எப்படி இறந்தார் என விசாரிக்கின்றனர்.