Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு

சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு

சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு

சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு

ADDED : அக் 06, 2025 04:40 AM


Google News
ஆத்துார்: வீட்டு சமையல் அறையில் இருந்த நாகப் பாம்பை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். தலைவாசல் அருகே, சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் ஈஸ்வரன், 40. இவரது வீட்டினுள் நேற்று, பாம்பு இருப்பதாக ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு மாலை, 4:00 மணிக்கு தகவல் அளித்தனர்.

உடனே சென்ற தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன், சமையல் அறையினுள் இருந்த ஐந்து அடி நீளம் கொண்ட நாகப் பாம்பை மீட்டனர். பின்னர், ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us