Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துாய்மை பணியாளருக்கு ரூ.10,000 ஊதியம் தேவை

துாய்மை பணியாளருக்கு ரூ.10,000 ஊதியம் தேவை

துாய்மை பணியாளருக்கு ரூ.10,000 ஊதியம் தேவை

துாய்மை பணியாளருக்கு ரூ.10,000 ஊதியம் தேவை

ADDED : செப் 09, 2025 01:40 AM


Google News
சேலம், தமிழ்நாடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர், துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமையில் உறுப்பினர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய கோரிக்கை மனு விபரம்:

சேலம் மாவட்ட கிராம ஊராட்சிகளில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக டேங்க் ஆப்ரேட்டராக பணியாற்றுவோருக்கு, சீரான ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு அரசு அறிவித்தப்படி, 7 வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை கணக்கீடு செய்து தர வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில், 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தம் செய்திட வேண்டும். 3 ஆண்டு பணி முடித்த துாய்மை பணியாளருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல். கிராம ஊராட்சியில், 10 ஆண்டு பணிமுடித்த துாய்மை காவலர்களுக்கு ஊராட்சி நிதியில் இருந்து 10,000 ரூபாய் ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us