ADDED : செப் 19, 2025 01:41 AM
சேலம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருவேரங்கன் தலைமை வகித்தார். அதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் செந்தில் பேசினார்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க கோரிக்கை விடுத்தனர். மாவட்ட செயலர் சுரேஷ், மாநில துணை தலைவர் செல்வராணி, அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


