Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'அ.தி.மு.க., ஆதரவாளர் ஓட்டுகளை நீக்கி விடாமல் கவனமாக இருக்கணும்'

'அ.தி.மு.க., ஆதரவாளர் ஓட்டுகளை நீக்கி விடாமல் கவனமாக இருக்கணும்'

'அ.தி.மு.க., ஆதரவாளர் ஓட்டுகளை நீக்கி விடாமல் கவனமாக இருக்கணும்'

'அ.தி.மு.க., ஆதரவாளர் ஓட்டுகளை நீக்கி விடாமல் கவனமாக இருக்கணும்'

ADDED : டிச 03, 2025 07:36 AM


Google News
ஆத்துார் ஆத்துார் நகர அ.தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி பாக முகவர்கள், பாக கிளை செயலர்கள், வார்டு செயலர்களுக்கு ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. நகர செயலர் மோகன் தலைமை வகித்தார்.

அதில் ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை டிபாசிட் இழக்க செய்யும்படி, கட்சியினர் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், பாக முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களது ஓட்டுகளை நீக்க வலியுறுத்த வேண்டும். அ.தி.மு.க., ஆதரவாளர்கள் ஓட்டுகளை, தி.மு.க.,வினர் நீக்கி விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலை, இலக்கிய அணி மாநில துணை செயலர் காளிமுத்து, கவுன்சிலர் ராஜேஸ்குமார், நகர, சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us