Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/'மக்களுடன் முதல்வர்' திட்ட செலவு அதிகம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

'மக்களுடன் முதல்வர்' திட்ட செலவு அதிகம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

'மக்களுடன் முதல்வர்' திட்ட செலவு அதிகம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

'மக்களுடன் முதல்வர்' திட்ட செலவு அதிகம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

ADDED : ஜன 12, 2024 11:58 AM


Google News
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:

கவுன்சிலர் ருக்குமணி(அ.தி.மு.க.,): நகராட்சியில், 5 நாள் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்துக்கு, 4.95 லட்சம் ரூபாய் செலவு என, கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதற்கு அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது.

மேலாளர் கார்த்திகேயன்: ஒவ்வொன்றாக பார்த்து குறைந்த விலையில் வாங்கப்பட்டுள்ளன. இது உத்தேச செலவினம் தான்.

கவுன்சிலர் தனபால் (பா.ம.க.,): குடிநீர் மேல்நிலை நீர்தேக்கதொட்டி பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை.

நகராட்சி பொறியாளர் பிரேமா: அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அமைக்கப்படும்.

கவுன்சிலர் சாமுண்டீஸ்வரி(தி.மு.க.,): ஏரிக்கொடியில் தெரு விளக்கு கேட்டு சண்டையிட்டும் இதுவரை பலன் இல்லை.

தலைவர் குணசேகரன்: நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து, 33 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. துணைத்தலைவர் தனம், கமிஷனர் சேம் கிங்ஸ்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us