ADDED : ஜூன் 05, 2025 02:37 AM
ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் நகர் பகுதிகளில் நேற்று, இரு தெருநாய்கள், அந்த வழியே சென்ற, 24 வயது முதல், 45 வயது வரையிலான ஆறு பேரை கடித்தன. இதனால் காயமடைந்த அவர்கள், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'ஒரே நாளில், ஆறு பேரை தெருநாய்கள் கடித்துள்ளன. மக்களை அச்சுறுத்தும்படி சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்' என்றனர்.