/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரிசர்வ் வங்கி பெயரில் ரூ.4.50 கோடி மோசடி 6 பேர் கைது; பலருக்கு சி.பி.சி.ஐ.டி., வலை ரிசர்வ் வங்கி பெயரில் ரூ.4.50 கோடி மோசடி 6 பேர் கைது; பலருக்கு சி.பி.சி.ஐ.டி., வலை
ரிசர்வ் வங்கி பெயரில் ரூ.4.50 கோடி மோசடி 6 பேர் கைது; பலருக்கு சி.பி.சி.ஐ.டி., வலை
ரிசர்வ் வங்கி பெயரில் ரூ.4.50 கோடி மோசடி 6 பேர் கைது; பலருக்கு சி.பி.சி.ஐ.டி., வலை
ரிசர்வ் வங்கி பெயரில் ரூ.4.50 கோடி மோசடி 6 பேர் கைது; பலருக்கு சி.பி.சி.ஐ.டி., வலை
ADDED : ஜூன் 06, 2025 01:28 AM
சேலம், இந்திய ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி, 4.50 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், 6 பேரை கைது செய்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மேலும் பலரை தேடுகின்றனர்.
தமிழகத்தின், துாத்துக்குடியை சேர்ந்த ஒருவர், 2024ல், ரிசர்வ் வங்கியில் புகார் மனு அளித்தார். அதில், 'இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் இரிடியம், காப்பர் விற்கப்படுகிறது. அதை வாங்கி விற்றால், கூடுதல் பணம் கிடைக்கும். அதற்கான சேவை கட்டணம், அதிகாரிகளுக்கு கமிஷன் தர வேண்டும் என கூறி, மர்ம நபர்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசூல் வேட்டை நடத்துகின்றனர்' என கூறி இருந்தார்.
இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் கென்னடி அளித்த புகார்படி, சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தம், 60, சந்திரா, 58, ஆகியோரை கடந்த, 28ல் கைது செய்தனர்.
தொடர்ந்து தர்மபுரியை சேர்ந்த அன்புமணி, 45, சேலம் முத்துசாமி, 35, கேசவன், 44, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சார்லா கிஷோர் குமார், 48, ஆகியோரை, 30ல் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து, தங்க நிற உலோகம், போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 20க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, 4.50 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும் பணம் முதலீடு செய்பவர்களை, டில்லிக்கு அழைத்து சென்று, உயர் அதிகாரிகள் போன்ற வேடமிட்டவர்களிடம் பேச செய்து, முதலீட்டை பெற்றதும் தெரிந்தது. இதில் தொடர்புடைய, மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். அதேநேரம் பாதிக்கப்பட்டவர்கள், சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.