ADDED : செப் 11, 2025 01:10 AM
சேலம் :சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் அஜ்மீர்கனி. இவரது வீடு முன் நிறுத்தியிருந்த பைக், மாதவன் தெருவை சேர்ந்த ஹரிஹரன் வீடு முன் நிறுத்தியிருந்த மொபட், கடந்த வாரம் திருடுபோனது.
செவ்வாய்ப்பேட்டை போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த, 13, 14 வயதுடைய, 4 சிறுவர்கள் திருடியது தெரிந்தது. அவர்களை, நேற்று கைது செய்த போலீசார், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இரு பைக், ஒரு மொபட்டை மீட்டனர்.