Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஊழலை தடுக்க 3 பேர் குழு

ஊழலை தடுக்க 3 பேர் குழு

ஊழலை தடுக்க 3 பேர் குழு

ஊழலை தடுக்க 3 பேர் குழு

ADDED : ஜூலை 27, 2024 01:24 AM


Google News
சேலம்: தமிழக ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையில், 25 லட்சம் ரூபாய் வரையான ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் அலுவலர்களாக, மண்-டல துணை பி.டி.ஓ., பணி மேற்பார்வையாளர், ஊராட்சி செயலர் அடங்கிய குழுவுக்கு அதிகாரம் அளித்து, அரசு உத்தரவிட்டுள்-ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கூறியதாவது: ஒப்பந்த நடைமுறையில் முதல்முறை, 3 பேர் குழு அமைத்தது வரவேற்கத்தக்கது.

இதேபோல் இன்னும் நிறைய மாற்றங்களை கொண்டுவந்து ஊராட்சி நிர்வாகத்தை செம்மைப்படுத்த வேண்டும். இதன்மூலம் ஊராட்சி தலைவர்களின் பணிப்பளு குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருதலைபட்சமாக ஒப்பந்தம் விடுவது, ஒப்பந்தத்தில் முறைகேடு நடப்பது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us