Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தம்பதியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

தம்பதியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

தம்பதியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

தம்பதியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

ADDED : செப் 09, 2025 01:40 AM


Google News
சேலம், சேலம் பெருமாபட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், 44, இவரது மனைவி சுமதி, 39. இவர்களுக்கும், பரமசிவத்தின் சகோதரருக்கும் இடையே வழித்தடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் வழித்தட பிரச்னையால் தகராறு ஏற்பட்டது. அப்போது பரமசிவம், சுமதியை, சகோதரரின் மகன், அவரது நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். காயமடைந்த இருவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பரமசிவம் கொடுத்த புகார்படி, இரும்பாலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தின் சகோதரர் மகன் கண்ணன், 32. அவரது நண்பர் சந்தோஷ், 23, ஆகியோரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us