/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மொபட் திருட முயன்ற 2 பேருக்கு 'காப்பு' மொபட் திருட முயன்ற 2 பேருக்கு 'காப்பு'
மொபட் திருட முயன்ற 2 பேருக்கு 'காப்பு'
மொபட் திருட முயன்ற 2 பேருக்கு 'காப்பு'
மொபட் திருட முயன்ற 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 17, 2024 12:57 AM
காரிப்பட்டி: காரிப்பட்டி அடுத்த சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்த திருநங்கை சத்யா, 32. இவர் அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில், தோழி ராஜாஸ்ரீயுடன் தங்கியுள்ளார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அவரது வீட்டின் வெளியே சத்தம் கேட்க, ஜன்னல் வழியே பார்த்தார்.
அப்போது சத்யாவின், 'டியோ' மொபட்டை, 3 பேர் திருட முயன்றனர். சத்யா, ராஜாஸ்ரீ ஆகியோர், சூர்யபிரகாஷ் என்பவரை பிடித்து காரிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்தவர் சூர்ய பிரகாஷ் என தெரிந்தது. அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், சமரசம் என்பதும், 3 பேரும் மொபட்டை திருட முயன்றதும் தெரிந்தது. சத்யா புகார்படி, காரிப்பட்டி போலீசார், சூர்யபிரகாஷ், 23, சுரேஷ், 23, ஆகியோரை கைது செய்து சமரசத்தை தேடுகின்றனர்.