Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., நீர் காவிரியில் உபரி நீர் திறக்க வாய்ப்பு

கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., நீர் காவிரியில் உபரி நீர் திறக்க வாய்ப்பு

கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., நீர் காவிரியில் உபரி நீர் திறக்க வாய்ப்பு

கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., நீர் காவிரியில் உபரி நீர் திறக்க வாய்ப்பு

ADDED : ஜூலை 09, 2024 10:53 PM


Google News
மேட்டூர்:கர்நாடகாவின் கபினி அணை நிரம்ப இன்னும் 1 டி.எம்.சி., நீர் மட்டுமே தேவைப்படுகிறது. வரும் நாட்களில் அணைக்கு வரும் நீர், உபரியாக வெளியேற்ற வாய்ப்புள்ளது.

கர்நாடகாவில் காவிரி, துணையாறுகள் குறுக்கே கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், கபினி, கே.ஆர்.எஸ்., மொத்த நீர் கொள்ளளவு, 19.5 மற்றும் 49.5 டி.எம்.சி.,யாகும்.

இதில், நேற்று கபினி அணை நீர் கொள்ளளவு, 18.5, கே.ஆர்.எஸ்., கொள்ளளவு, 25.5 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. இதில், கபினி நிரம்ப ஒரு டி.எம்.சி., கே.ஆர்.எஸ்., நிரம்ப, 24.5 டி.எம்.சி., நீர் தேவை.

நேற்று இரு அணைகளுக்கும் சராசரியாக வினாடிக்கு, 6,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதில், கபினியில், 2,000 கன அடி, கே.ஆர்.எஸ்.,சில், 500 கன அடி என மொத்தம், 2,500 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

கபினி அணை நிரம்ப இன்னமும் 1 டி.எம்.சி., நீர் தேவை. இன்று கபினி நிரம்பும் என்பதால் அணைக்கு வரும் நீர் உபரியாக காவிரியாற்றில் வெளியேற்ற வாய்ப்புள்ளது. அதற்கேற்ப மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us