Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பனியன் கழிவு குடோனில் தீ ரூ.2 கோடி மதிப்பில் சேதம்

பனியன் கழிவு குடோனில் தீ ரூ.2 கோடி மதிப்பில் சேதம்

பனியன் கழிவு குடோனில் தீ ரூ.2 கோடி மதிப்பில் சேதம்

பனியன் கழிவு குடோனில் தீ ரூ.2 கோடி மதிப்பில் சேதம்

ADDED : ஆக 05, 2024 06:56 AM


Google News
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, பனியன் கழிவு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

நாமக்கல் மாவட்டம்

பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன், 42; கணபதிபா-ளையம் பகுதியில் குடோன் அமைத்து, கழிவு பனியன் துணி-களை சேகரித்து, மறு சுழற்சி செய்து நுால் தயாரிக்கும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில் குடோனில் தீப்பிடித்தது. குடோன் முழுதும் பழைய பனியன் கழிவு வைக்கப்பட்டிருந்ததால், வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

வெப்படை, குமாரபாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோன் முழுதும் பர-வியதால், 5 மணி நேரம் போராடி வெளியே எரிந்த தீயை கட்-டுக்குள் கொண்டு வந்தனர். பின், பொக்லைன் இயந்திரம் மூலம் குடோனின் ஒரு பகுதி சுவரை இடித்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்றனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்-பட்டு, 14 மணி நேர போராட்டத்திற்கு பின், நேற்று மாலை, 5:00 மணிக்கு தீயை முற்றிலும் அணைத்தனர். குடோனில் வைக்-கப்பட்டிருந்த பனியன் கழிவு முற்றிலும் எரிந்து சாம்பலாகின. மேற்கூரை சரிந்தது. இதனால் சேத மதிப்பு, இரண்டு கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிகிறது. வருவாய் துறை அதிகாரிகள், பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us