ADDED : ஜூன் 30, 2024 02:31 AM
மேட்டூர்:சேலம் மாவட்டம், மேட்டூர், கோம்புரான்காட்டை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் ராஜகோபால், 39. இவரது மனைவி கவுரி, 35. மகன்கள் மகிழவன், 11, வான்முகிலன், 8.
அனைவரும் 'யுனிகான்' பைக்கில், சேலம் - ஈரோடு மாவட்ட எல்லை அருகே, பெரும்பள்ளம் பகுதியில், மதியம், 12:00 மணியளவில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, எதிர்பாராதவிதமாக பைக் மோதியது.
இதில், வான்முகிலன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சேலம் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் ராஜகோபால் இறந்தார். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.