Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாய்ந்த மரம்: அறுந்த மின்கம்பிகள்

சாய்ந்த மரம்: அறுந்த மின்கம்பிகள்

சாய்ந்த மரம்: அறுந்த மின்கம்பிகள்

சாய்ந்த மரம்: அறுந்த மின்கம்பிகள்

ADDED : ஜூலை 20, 2024 08:37 AM


Google News
ஏற்காடு: ஏற்காட்டில் சில நாட்களாகவே சாரல் மழை, பனிமூட்டம் நிலவுகிறது. நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் சாரல் மழை, பனிமூட்டம் நிலவியது.

இதனால் நாகலுார் மலை கிராமத்துக்கு செல்லும் சாலையில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகே நேற்று இரவு, 8:40 மணிக்கு ஒரு மரம், வேருடன் சாய்ந்து அருகே இருந்த மின்கம்பிகள் மீது விழுந்தது.

இதில் அடுத்தடுத்து இருந்த, 2 மின்கம்பங்களில், கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மலை கிராமங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே தீயணைப்புத்துறையினர், மின் ஊழியர்கள், மக்கள் உதவியுடன் மரத்தை அகற்றி மின் வினியோகத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us