Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'

ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'

ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'

ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'

ADDED : ஜூலை 26, 2024 02:11 AM


Google News
மகுடஞ்சாவடி: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியத்தில், 30க்கும் மேற்-பட்ட ஏரி, குட்டைகளில், உரிய விதிகளை பின்பற்றி வண்டல் மண் அள்ள, விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்-ளது. ஆனால் மகுடஞ்சாவடி ஊராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த-வர்கள், ஏரி, குட்டைகளில் விதிமீறி மண் அள்ளி விற்பதாக குற்-றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பா.ம.க.,வை சேர்ந்த, மகுடஞ்சாவடி ஊராட்சி தலைவி மேகலா கூறியதாவது: ஊராட்சிக்குட்பட்ட சொரியாம்-பட்டி ஏரியில், தி.மு.க.,வினர், வண்டல் மண்ணை அள்ளி, விவ-சாயத்துக்கு பயன்படுத்தாமல் டிப்பர் லாரிகள் மூலம் கடத்தி, 'லோடு', 8,000 முதல், 10,000 ரூபாய் வரை, உள்ளூர், வெளி-யூரில் பல்வேறு பயன்பாட்டுக்கு விற்கின்றனர். இதை அறிந்து, மக்கள் உதவியுடன் இன்று(நேற்று) காலை, 11:00 மணிக்கு ஏரிக்கு சென்றபோது, டிப்பர் லாரிகளை அவசரமாக எடுத்துச்-சென்றனர். இதுகுறித்து மகுடஞ்சாவடி பி.டி.ஓ.,வுக்கு தகவல் தெரிவித்தோம். அவர் ஆய்வு செய்துள்ளார். இனி சேலம் கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இத்தகவலை வீடியோவாக பதிவு செய்து வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us