Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ டாஸ்மாக் கடையில் தகராறு தொழிலாளி அடித்து கொலை

டாஸ்மாக் கடையில் தகராறு தொழிலாளி அடித்து கொலை

டாஸ்மாக் கடையில் தகராறு தொழிலாளி அடித்து கொலை

டாஸ்மாக் கடையில் தகராறு தொழிலாளி அடித்து கொலை

ADDED : ஜூலை 17, 2024 08:46 PM


Google News
சேலம்:சேலம், கருப்பூர் மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்தவர் சக்திவேல், 47, கூலி தொழிலாளி. கடந்த, 15 இரவு டால்மியா போர்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில், அவரது நண்பர் மேட்டுபதி பகுதியை சேர்ந்த மாரிமுத்து, 42, என்பவருடன் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பூபாலன், 38, அவரது நண்பர் விக்னேஷ், 26, ஆகியோர் மாரிமுத்து மற்றும் சக்திவேலிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் தன் அத்தையுடன் தகாத உறவில் இருப்பதாக கூறி, பூபாலன் மாரிமுத்துவை தாக்க முயற்சித்தார். அப்போது தடுக்க வந்த சக்திவேலை தள்ளிவிட்டார். அதில் அவருக்கு தலையில் அடிபட்டது. அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் காலை, நீண்ட நேரமாகியும் சக்திவேல் நினைவு திரும்பாமல் இருந்ததால், அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பூபாலன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us