Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கைதி ஆசனவாயில் பதுக்கிய அலைபேசி பறிமுதல்

கைதி ஆசனவாயில் பதுக்கிய அலைபேசி பறிமுதல்

கைதி ஆசனவாயில் பதுக்கிய அலைபேசி பறிமுதல்

கைதி ஆசனவாயில் பதுக்கிய அலைபேசி பறிமுதல்

ADDED : மார் 13, 2025 03:06 AM


Google News
சேலம்:நாமக்கல் மாவட்டம் கரடிப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா, 25. வழிப்பறி வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில், கடந்த செப்டம்பரில் அடைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் நாமக்கல் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்று மீண்டும், சேலம் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, சிறை போலீஸ் மவுலீஸ்வரன், நரேஷ்குமார் சோதனை செய்தபோது அவரது ஆசனவாயிலில், சாதாரண மொபைல் போன், 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து சிறை எஸ்.பி., வினோத் விசாரித்ததில், 'சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி தினேஷ், 36, என்பவர், மொபைல், கஞ்சா கொண்டு வந்தால், 15,000 ரூபாய் தருவதாக தெரிவித்தார்' என்றார்.

இதையடுத்து, மொபைல், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சூர்யா, தினேஷ் ஆகியோர், 2 மாதங்கள் உறவினர்களை சந்திக்க, எஸ்.பி., தடை விதித்தார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us