Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெண்ணிடம் செயின் பறிப்பு வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

பெண்ணிடம் செயின் பறிப்பு வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

பெண்ணிடம் செயின் பறிப்பு வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

பெண்ணிடம் செயின் பறிப்பு வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

ADDED : ஜூன் 19, 2024 01:58 AM


Google News
சேலம், சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவிதா, 25, இவர் கடந்த, 2016ல், திருவாக்கவுண்டனுார் பைபாஸ் பகுதியில், மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிகண்டன், 35, கவிதாவின் கழுத்திலிருந்து, 7 பவுன் சங்கிலியை பறித்து சென்றார். சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்

இவ்வழக்கு சேலம் ஜே.எம்.எண் 2ல் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மணிகண்டனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் தினேஷ்குமரன் தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us