Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வரி ஏய்ப்போரை கண்டறிய 'தெரு தணிக்கை முறை' ஒத்துழைப்பு அளிக்க வணிகர் சங்கத்துக்கு வேண்டுகோள்

வரி ஏய்ப்போரை கண்டறிய 'தெரு தணிக்கை முறை' ஒத்துழைப்பு அளிக்க வணிகர் சங்கத்துக்கு வேண்டுகோள்

வரி ஏய்ப்போரை கண்டறிய 'தெரு தணிக்கை முறை' ஒத்துழைப்பு அளிக்க வணிகர் சங்கத்துக்கு வேண்டுகோள்

வரி ஏய்ப்போரை கண்டறிய 'தெரு தணிக்கை முறை' ஒத்துழைப்பு அளிக்க வணிகர் சங்கத்துக்கு வேண்டுகோள்

ADDED : ஆக 02, 2024 04:10 AM


Google News
சேலம்: ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையை செம்மைப்படுத்த, தமிழக வணிக வரித்துறை சார்பில், கடந்த, 26ல், 'தெரு தணிக்கை முறை' தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட வணிக வரித்துறை இணை கமிஷனர் மகேஸ்-வரி(மாநில வரிகள்), சேலம், நாமக்கல் மாவட்ட அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடித விபரம்: ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையை செம்மைப்படுத்த, தமிழக வணிக வரித்துறை சார்பில், கடந்த, 26ல், 'தெரு தணிக்கை முறை' தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வணிக வரித்துறை அலுவலர்கள், ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு முகவரியை பரி-சோதிப்பர்.

இந்த தணிக்கையின் போது, முறையாக பதிவு சான்று பெற்று, மாதாந்திர நமுனாக்களை தாக்கல் செய்து, வரி செலுத்தி வரும் வணிகர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பதிவு சான்று பெற்றுள்ள வணிகர்களின் வணிக இடத்துக்கு வரும் அலுவ-லர்கள், மிக எளிமையான அடிப்படை தகவல்களை மட்டுமே கேட்பர். அதை வணிக இடத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் உடனே கூறி, அலுவலர்கள் தரும் படிவம்: 1ல் கையொப்பம் இட்டால், சில நிமிடத்தில் அப்பணி முடிந்து அடுத்த வணிக இடத்துக்கு செல்வர். அதனால் வியாபாரத்தில் எந்த இடையூறு, கால விரயம் ஏற்படாது. அதனால் சங்கங்களை சேர்ந்த வணி-கர்கள், தெரு தணிக்கை பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன்மூலம் போலி, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் செயல்படும் வணிகர்களை அடையாளம் காண வணிகர் சங்-கங்கள் உதவ வேண்டும். இதில் இடையூறு, சந்தேகம் ஏற்-பட்டால், 94439 - 64040, 94423-64040 என்ற எண்களில் தகவல் தெரிவித்தால், உடனே களையப்படும்.

இவ்வாறு கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us