Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தீச்சட்டி ஏந்தியபடி மனு அளிக்க வந்த நிர்வாகிகள்

தீச்சட்டி ஏந்தியபடி மனு அளிக்க வந்த நிர்வாகிகள்

தீச்சட்டி ஏந்தியபடி மனு அளிக்க வந்த நிர்வாகிகள்

தீச்சட்டி ஏந்தியபடி மனு அளிக்க வந்த நிர்வாகிகள்

ADDED : ஆக 06, 2024 02:13 AM


Google News
சேலம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற, தாதகாப்பட்டி கிளை செயலர் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள், நேற்று தீச்சட்டி ஏந்தியபடி, மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்களிடம், தீச்சட்டியுடன் உள்ளே அனுமதிக்க முடியாது என கூறி, போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனால், தீச்சட்டியை அணைத்து ஓரமாக வைத்து விட்டு, மனு அளித்தபின் அவர்கள் கூறியதாவது:

மாநகரில் பிரதான சாலைகள் தவிர, உள் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதனால், மக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக உள் சாலைகளை சீரமைக்க வேண்டும். அத்துடன் மக்களை அதிகம் பாதிக்கும் மின்கட்டண உயர்வையும் தமிழக அரசு திரும்பபெற வேண்டும். மேட்டூர் அணை உபரிநீர் வீணாக சென்று கடலில் கலப்பதால், அதை தடுக்க தடுப்பணை கட்டி, சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us