Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உலக சிலம்ப போட்டியில் தங்கம் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

உலக சிலம்ப போட்டியில் தங்கம் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

உலக சிலம்ப போட்டியில் தங்கம் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

உலக சிலம்ப போட்டியில் தங்கம் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ADDED : ஜூலை 04, 2024 11:06 AM


Google News
ஆத்துார்: ஆத்துார் அருகே கல்பகனுாரில், ஆதித்த கரிகாலன் ஸ்போர்ட்ஸ் அகாடமி உள்ளது. அங்கு அப்பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர், சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த ஜூன், 28 முதல், 30 வரை, மலேசியா, கோலாலம்பூரில், உலக அளவில், 23வது கராத்தே, சிலம்ப போட்டி நடந்தது. அதில் இந்தியாவில் இருந்து, 59 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள், 25 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கல பதக்கங்களை வென்றனர்.

அதில் கல்பகனுாரை சேர்ந்த ராகுல், சவுந்தர்யா, சினேகா, மோனிஷ், கிஷோர், கிருத்திக் இடம் பெற்றிருந்தனர். அவர்கள், 1 தங்கம், 5 வெண்கலம் வென்றிருந்தனர். நேற்று முன்தினம், சென்னை வந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று சொந்த ஊரான, கல்பகனுாருக்கு வந்தபோது, அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us