ADDED : மார் 21, 2025 01:48 AM
காடுகள் தினம்கொண்டாட்டம்
ஓமலுார்:ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், உலக காடுகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை கோசலை தலைமை வகித்தார். அதில் கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மஞ்சப்பை பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியே விழிப்புணர்வு பேரணி நடந்தது. பின் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்ட பசுமை தோழி அனிஷாராணி, பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராமலிங்கம் பங்கேற்றனர்.