ADDED : ஜூலை 06, 2024 06:49 AM
அயோத்தியாப்பட்டணம் : அயோத்தியாப்பட்டணம் அடுத்த ஆலடிப்பட்டியில், 'சிறுதானிய பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள்' தலைப்பில், உள் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி நேற்று நடந்தது.
ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். அதில் அரசு சாரா தொண்டு நிறுவன தலைவர் வெங்கடாசலம், தொழில்நுட்ப விளக்கம் அளித்தார். பல்துறை அதிகாரிகள், துறை சார்ந்த திட்-டங்கள், மானிய விபரங்கள் குறித்து தெரிவித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.