Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அத்திவரதர் தரிசனம் வரும் 6 வரை நீட்டிப்பு

அத்திவரதர் தரிசனம் வரும் 6 வரை நீட்டிப்பு

அத்திவரதர் தரிசனம் வரும் 6 வரை நீட்டிப்பு

அத்திவரதர் தரிசனம் வரும் 6 வரை நீட்டிப்பு

ADDED : ஜூலை 04, 2024 07:26 AM


Google News
சேலம். : காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் உள்ள ஆனந்த சரஸ் குளத்தில் இருந்து, 40 ஆண்டுகளுக்கு பின், 2019 ஜூலை, 1 முதல், அத்தி-வரதர், 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதை நினைவு கூறும்படி, சேலம், பட்டைக்கோவில் அருகே கனக ராஜகணபதி தெருவில் உள்ள ராமர் பஜனை மடத்தில், கடந்த, 1 முதல் நேற்று வரை, அத்தி வரதரை, பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'அத்தி' மரத்தால் செய்யப்பட்ட இவரை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

இந்நிலையில் பக்தர்கள் கோரிக்கையால், நேற்று நிறைவடைய இருந்த அத்தி வரதர் தரிசனம், ஜூலை, 6 வரை நீட்டிக்கப்பட்-டுள்ளது. தினமும் காலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரை, பக்தர்கள் தரிசிக்கலாம். விபரம் பெற, 88256 08732 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us