/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தவர் படுகாயம் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தவர் படுகாயம்
தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தவர் படுகாயம்
தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தவர் படுகாயம்
தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தவர் படுகாயம்
ADDED : ஆக 05, 2024 02:16 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், அண்ணா நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி சக்திவேல், 27.
அவர் நேற்று காலை, 7:00 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த ராமசாமி கிணற்றுக்கு புறா பிடிக்க சென்றார். அப்போது, 80 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் இறங்கிக்கொண்டிருந்தார். தடுப்பு சுவரை பிடித்தபோது தவறி கிணற்றில் விழுந்தார். படுகாயம் அடைந்தார். அவருடன் சென்ற மற்றொரு வாலிபர் அளித்த தகவல்படி, கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள் சென்று, சக்திவேலை ஒரு மணி நேரத்துக்கு பின் வலை மூலம் மீட்டனர். தொடர்ந்து கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.