ADDED : மார் 16, 2025 01:59 AM
குண்டத்தில் விழுந்தவர் பலி
சேலம்:சேலம், அன்னதானப்பட்டி, ஆட்டுக்காரன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி, 52. தொழிலாளியான இவர், செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோவிலில் கடந்த, 6ல் நடந்த அக்னி குண்ட விழாவில், தீ மிதித்தபோது தவறி விழுந்தார். தீக்காயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.