/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப் கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்
கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்
கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்
கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்
ADDED : ஜூலை 07, 2024 01:24 AM
வீரபாண்டி, : ஒருங்கிணைந்த கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற கால்நடை வளர்ப்போர், விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கால்நடைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் கால்நடை தீவன பற்றாக்குறையை தீர்க்க, பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு திட்டங்கள் செயல்-படுத்தப்படுகின்றன. 2024 - 25ம் ஆண்டில் சேலம் மாவட்-டத்தில் ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டத்தில் பசுந்தீ-வன உற்பத்தி பரப்பை, 275 ஏக்கராக விரிவுபடுத்த இலக்கு நிர்-ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கால்நடை வளர்ப்போருக்கு நீர்பா-சன வசதியுள்ள தென்னை, பழ தோட்டங்களில் அரை ஏக்கர் முதல் ஒரு ஹெக்டேர் வரை தீவன பயிர்களான சோளம், கம்பு, நேப்பையர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயறு வகை அல்லது தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒரு பயிரை 3 ஆண்டுகள் ஊடுபயிராக சாகுபடி செய்தால் பராமரிப்பு மானியமாக ஏக்கருக்கு, 3,000 ரூபாய் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவி-னருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. மொத்த பயனாளிகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, 30 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதியான பயனாளிகள் மானிய உதவி பெற வரும், 15க்குள் அருகே உள்ள கால்நடை மருந்த-கங்கள் அல்லது கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொண்டு படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.