Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இடைப்பாடியில் இ.பி.எஸ்., ஆலோசனை மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

இடைப்பாடியில் இ.பி.எஸ்., ஆலோசனை மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

இடைப்பாடியில் இ.பி.எஸ்., ஆலோசனை மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

இடைப்பாடியில் இ.பி.எஸ்., ஆலோசனை மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

ADDED : ஜூலை 23, 2024 01:15 AM


Google News
இடைப்பாடி : அ.தி.மு.க., பொதுசெயலர் இ.பி.எஸ்., இடைப்பாடி தொகு-தியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்-தினார். மாற்று கட்சிகளில் இருந்து விலகி, 100க்கும் மேற்-பட்டோர் அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுசெயலரு-மான இ.பி.எஸ்., நேற்று தன் சொந்த தொகுதியான இடைப்பாடி வந்தார். இடைப்பாடியில் உள்ள அரசினர் விருந்தினர் மாளி-கையில், இடைப்பாடி தொகுதியில் உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் மணி, நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர்கள் மாதேஸ், மாதேஸ்வரன், ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்-வாகிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர், இடைப்பாடி ஒன்றியம், சித்துார் ரெட்டிப்பட்டியில் உள்ள விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து விலகி, 100க்கும் மேற்பட்டவர்கள் இ.பி.எஸ்., முன்னி-லையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

* சேலத்தில், ஏற்காடு ஒன்றிய, அ.தி.மு.க., மாணவரணி செய லர் புகழேந்தி ஏற்பாட்டில், அ.ம.மு.க. நிர்வாகிகளான ஏற் காடு ஒன்றிய இணை செயலர் பாண்டியராஜன், ஒன்றிய பொரு ளாளர் சண்முகவேல், துணை செயலர் வேலன் உள்பட 20 பேர், அக்கட்சியில் இருந்து விலகி இ.பி.எஸ்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us