ADDED : மார் 15, 2025 02:45 AM
மது விற்ற 3 பேருக்கு 'காப்பு'
கெங்கவல்லி:கெங்கவல்லி, கூடமலையில் வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்கும் வீடியோ நேற்று முன்தினம் வெளியானது. இதன் எதிரொலியாக, கெங்கவல்லி போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மதுபாட்டில் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட, ராஜா, 30, அரசநத்தம் தீனரட்சகன், 23, ஆறுமுகம், 47, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.