ADDED : மார் 26, 2025 01:34 AM
இரவு நேர காவலாளி திடீர் சாவு
சேலம்:இரவு நேர காவலாளி, பணியின்போது உயிரிழந்தார்.சேலம் திருவாக்கவுண்டனுார், அய்யர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன், 70. இவர் முல்லை நகர் பகுதியில், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த அவர், அங்கேயே இறந்து கிடந்தார். சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.