Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தண்ணீர் என நினைத்துவிஷம் குடித்தவர் சாவு

தண்ணீர் என நினைத்துவிஷம் குடித்தவர் சாவு

தண்ணீர் என நினைத்துவிஷம் குடித்தவர் சாவு

தண்ணீர் என நினைத்துவிஷம் குடித்தவர் சாவு

ADDED : மார் 21, 2025 01:48 AM


Google News
தண்ணீர் என நினைத்துவிஷம் குடித்தவர் சாவு

கெங்கவல்லி:கெங்கவல்லி, 74.கிருஷ்ணாபுரம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 38. விவசாயியான இவர், நேற்று காலை, 7:40 மணிக்கு, பக்கத்து தோட்ட விவசாயி ராஜேந்திரனின், கோழி பண்ணைக்குச்சென்றார். அங்கு தண்ணீர் என நினைத்து, கோழிகளின் மீது பூச்சிகள் அமராமல் இருக்க பயன்படுத்தும் மருந்து கலந்த தண்ணீரை குடித்துள்ளார். அதில் மயங்கி விழுந்த அவரை, மக்கள் மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us