Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாநகரில் குடிநீர் பிரச்னைமக்கள் புகார் தெரிவிக்கலாம்

மாநகரில் குடிநீர் பிரச்னைமக்கள் புகார் தெரிவிக்கலாம்

மாநகரில் குடிநீர் பிரச்னைமக்கள் புகார் தெரிவிக்கலாம்

மாநகரில் குடிநீர் பிரச்னைமக்கள் புகார் தெரிவிக்கலாம்

ADDED : மார் 14, 2025 01:50 AM


Google News
மாநகரில் குடிநீர் பிரச்னைமக்கள் புகார் தெரிவிக்கலாம்

சேலம்:குடிநீர் பிரச்னை குறித்து, சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்ட முடிவில் அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது:மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளுக்கும் குடிநீர் சீராக கிடைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகாரிகளுடன் ஆலோசித்து குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னை எங்கும் வராமல் இருக்க, தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். குடிநீர் பிரச்னை இருப்போர், 0427 - 2212844 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் குப்பை தேங்காமல் உடனுக்குடன் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, அஸ்தம்பட்டி மேல்நிலை குடிநீர் தொட்டி பகுதியில், அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்து, மாநகராட்சி முழுதும் குடிநீர் வினியோகம் சீராக இருக்க வேண்டும்; பிரச்னை ஏற்பட்டால், லாரி மூலம் குடிநீர் வினியோகிக்க உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us