/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ '2047ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற அரசு நடவடிக்கை' '2047ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற அரசு நடவடிக்கை'
'2047ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற அரசு நடவடிக்கை'
'2047ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற அரசு நடவடிக்கை'
'2047ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற அரசு நடவடிக்கை'
ADDED : மே 12, 2025 04:08 AM
வேலுார்: வேலுாரை அடுத்த அரியூரில், நாராயணிபீடம், விஸ்தார் அமைப்பு மற்றும் சேவாபாரதி சார்பில், இலவச நடமாடும் மருத்துவ முகாம் தொடக்க விழா, வேலுார் ஸ்ரீபுரத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணைஅமைச்சர் முருகன், நாராயணி பீடம் நிறுவனர் சக்தி அம்மா இணைந்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் முருகன் பேசியதாவது:
நாட்டில் ஏற்படும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளில், சேவா பாரதி அமைப்பு முழு அளவில் ஈடுபடுத்தி பணி செய்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் ஒரே ஆண்டில், 11 மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வழங்கி சாதனை படைத்துள்ளார். 2047ல் நாம் வளர்ச்சி அடைந்த நாடாக மாற, அனைத்து விதமான நடவடிக்கைகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு பேசினார்.