Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி

சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி

சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி

சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி

ADDED : செப் 13, 2025 02:15 AM


Google News
வாலாஜா:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் செந்தில்நாதன், 44; பி.எஸ்.சி., பட்டதாரி. இவர், தன் வீட்டில் டியூஷன் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு தன்னிடம் டியூஷன் படித்த பிளஸ் 1 மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வாலாஜா போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திடீரென செந்தில்நாதன் தலைமறைவானார். திருச்செந்துாரில் சாமியார் வேடத்தில் திரிந்த அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us