Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி கைது

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி கைது

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி கைது

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி கைது

ADDED : ஜன 03, 2024 12:58 AM


Google News
காவேரிப்பாக்கம்:தஞ்சாவூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42. இவர் மனைவி அறிவழகி, 31. இருவரும், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில், இ - சேவை மையம் நடத்தி வருகின்றனர்.

அங்கு வருபவர்களிடம், 'எங்களுக்கு அரசு உயரதிகாரிகள் பலரை தெரியும். அவர்கள் மூலம், அரசு வேலை வாங்கி தருகிறோம்' என, ஆசை வார்த்தை கூறி, பலரிடம் பணம் பெற்றனர். இதை நம்பி, காவேரிப்பாக்கம் உப்புமேட்டு காலனியை சேர்ந்த சங்கீதா, 28, என்பவர், 1 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

கடந்த இரு நாட்களுக்கு முன், இ - சேவை மையத்திற்கு சங்கீதா சென்றபோது, அங்கு ஏற்கனவே பணம் கொடுத்து ஏமாந்த பலர், செந்தில்குமார் மற்றும் அறிவழகியிடம், பணத்தை திரும்ப கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது சங்கீதா, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நேற்று இருவரையும் கைது செய்து, 4.58 லட்சம் ரூபாய், 9 சவரன் நகை மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us