Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ போலி சான்றிதழில் பணி இரண்டு வீரர்கள் மீது வழக்கு

போலி சான்றிதழில் பணி இரண்டு வீரர்கள் மீது வழக்கு

போலி சான்றிதழில் பணி இரண்டு வீரர்கள் மீது வழக்கு

போலி சான்றிதழில் பணி இரண்டு வீரர்கள் மீது வழக்கு

ADDED : ஜூன் 08, 2025 01:39 AM


Google News
அரக்கோணம்:அரக்கோணம் அருகே, மத்திய தொழிற்பாதுகாப்பு படையில், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த, இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்திலுள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், நாடு முழுதும் தேர்வு செய்யப்படும், மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்களுக்கு துப்பாக்கி சுடுதல் உட்பட, பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த பிட்டா பாரி, 24, மனுகுமார் சிங், 23, ஆகியோர், மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வாகி, ஜன., முதல் பயிற்சி பெற்று வந்தனர்.

இவர்கள் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து சோதனை செய்ய, அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்களில், இருவரும் போலி இருப்பிட சான்று கொடுத்து, பணியில் சேர்ந்தது தெரிந்தது.

புகாரில், இருவர் மீதும் வழக்கு பதிந்து, தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us