Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/போலி சான்றிதழ் கொடுத்த நாகா பெண் மீது வழக்கு

போலி சான்றிதழ் கொடுத்த நாகா பெண் மீது வழக்கு

போலி சான்றிதழ் கொடுத்த நாகா பெண் மீது வழக்கு

போலி சான்றிதழ் கொடுத்த நாகா பெண் மீது வழக்கு

ADDED : ஜன 25, 2024 01:28 AM


Google News
அரக்கோணம்,:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் வீரர்களுக்கு, பாதுகாப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த ராம் அவதார் என்பவரின் மகள் மாயா, 27. இவர், மத்திய தொழில் பாதுகாப்பு படை பணியில், கான்ஸ்டபிள் பணிக்கு கடந்தாண்டு ஆகஸ்டில் தேர்வானார். அதற்காக தக்கோலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், அக்டோபரில் சேர்ந்து, மூன்று மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், அவரது சான்றிதழின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய, நாகாலாந்து மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவரது ஜாதி சான்றிதழ் போலி என தெரிய வந்தது.

இதையடுத்து அவர் மீது துறை ரீதியாக, மத்திய தொழில் பாதுகாப்பு படை வாயிலாக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தக்கோலம் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான மாயாவை தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us