/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ கோபுரம் மீது இடி தாக்கி கோவில் சிற்பம் சேதம் கோபுரம் மீது இடி தாக்கி கோவில் சிற்பம் சேதம்
கோபுரம் மீது இடி தாக்கி கோவில் சிற்பம் சேதம்
கோபுரம் மீது இடி தாக்கி கோவில் சிற்பம் சேதம்
கோபுரம் மீது இடி தாக்கி கோவில் சிற்பம் சேதம்
ADDED : ஜூலை 02, 2024 05:24 AM

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த வாழப்பந்தல் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மணிகண்டேஸ்வரர் கோவில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, கோவில் கருவறை கோபுரம் மீது இடி தாக்கியது. இதில், கோபுரத்திலிருந்த இரண்டு சிலைகள் உடைந்து சேதமாகின.