Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவில் ரத்த தான தின உறுதிமொழி ஏற்பு

தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவில் ரத்த தான தின உறுதிமொழி ஏற்பு

தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவில் ரத்த தான தின உறுதிமொழி ஏற்பு

தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவில் ரத்த தான தின உறுதிமொழி ஏற்பு

ADDED : ஜூன் 15, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவில் நேற்று உலக ரத்த தான தின சிறப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் படை பிரிவின் துணை கமாண்டன்ட் சங்கேத் மற்றும் பிரவீன் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

ரத்த தானம் செய்த வீரர்களை பாராட்டிய பின் ரத்த தானத்தின் முக்கியத்துவம் அதனால் வரும் பயன் குறித்து வீரர்களுக்கு அதிகாரிகள் விளக்கினர்.

பின் தேசிய பேரிடர் மீட்புப் படை மருத்துவ குழு வாயிலாக அருகில் உள்ள நகரிகுப்பம் தக்கோலம் உள்ளிட்ட கிராமங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளித்தனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us