ADDED : மார் 16, 2025 12:31 AM

கடலாடி; கடலாடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி சேவாக் 34. இவர் கடலாடி பகுதியில் அடிக்கடி வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துஉள்ளார்.
கடலாடி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க எஸ்.பி., சந்தீஸ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டர் தடுப்பு சட்டத்தில் முத்துப்பாண்டி சேவாக்கை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.