ADDED : செப் 04, 2025 04:16 AM
கீழக்கரை: கீழக்கரை அருகே விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ் 45.
வெளிநாட்டில் வேலை பார்த்து சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார். இந் நிலையில் தனது அண்ணன் மகள் திருமணத்திற்காக நேற்று மதியம் 3:00 மணிக்கு வீட்டருகே உள்ள தோட்டத்திற்கு சென்று வாழை மரத்தை அரி வாளால் வெட்டினார்.
அப்போது மரத்தின் அருகில் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில் சம்பவ இடத்தில் செல்வ ராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ள னர். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.