Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 100 வயதை கடந்த வாக்காளர் விபரம் சரிபார்ப்பு பணி தீவிரம்

100 வயதை கடந்த வாக்காளர் விபரம் சரிபார்ப்பு பணி தீவிரம்

100 வயதை கடந்த வாக்காளர் விபரம் சரிபார்ப்பு பணி தீவிரம்

100 வயதை கடந்த வாக்காளர் விபரம் சரிபார்ப்பு பணி தீவிரம்

ADDED : செப் 11, 2025 05:21 AM


Google News
திருவாடானை : திருவாடானை சட்டசபை தொகுதியில் 100 வயதைக் கடந்த வாக்காளர்களின் வயதை சரிபார்க்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருவாடானை சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 971 ஆண்கள், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 311 பெண்கள், 3 திருநங்கைகள் என 3 லட்சத்து 18 ஆயிரத்து 37 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வாக்காளர் பட்டியலில் 100 வயதும் அதற்கு மேல் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் வயது, முகவரியை உறுதி செய்யும் வகையில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்க்கும் பணி நடக்கிறது.

இவர்களில் யாராவது இறந்து இருந்தால் அதனை உறுதிப்படுத்த இறப்பு சான்று அல்லது உறவினர்கள், அருகே வசிக்கும் நபர்களிடம் விபரம் சேகரிக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், 100 வயதும் அதற்கு மேல் உள்ள வாக்காளர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

அதனை சரிபார்த்த பின் திருத்த நடவடிக்கை மேற்கொண்டு பட்டியல் தயாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாடானை சட்டசபை தொகுதியில் அதற்கான பணிகள் நடக்கிறது என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us