/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குதிரைமொழி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் எப்போது; அமைச்சரின் அறிவிப்புடன் நின்று போன மர்மம் குதிரைமொழி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் எப்போது; அமைச்சரின் அறிவிப்புடன் நின்று போன மர்மம்
குதிரைமொழி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் எப்போது; அமைச்சரின் அறிவிப்புடன் நின்று போன மர்மம்
குதிரைமொழி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் எப்போது; அமைச்சரின் அறிவிப்புடன் நின்று போன மர்மம்
குதிரைமொழி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் எப்போது; அமைச்சரின் அறிவிப்புடன் நின்று போன மர்மம்

முடக்கம்
இத்திட்டத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் 2006 முதல் முடக்கப்பட்டது. இதன் காரணமாக கடல் நீரை குடிநீராக்கும் பிளான்டில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் துருப்பிடித்து பழைய இரும்புக்கு கூட விற்க முடியாத நிலையில் இத்திட்டம் முற்றிலும் முடங்கியது. இன்றும் நரிப்பையூர் கூட்டுக்குடிநீர் திட்ட இயந்திரங்கள் காட்சிப்பொருளாக உள்ளன.
குதிரை மொழி திட்டம்
அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு குதிரை மொழி என்ற இடத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. திட்டத்திற்கு நிதியுதவி கிடைக்காமல் உலக வங்கி, ஜப்பான் போன்ற நாடுகளில் நிதி நிறுவனங்களில் இத்திட்டம் செயல்படுத்த தமிழக அரசு கடன் கேட்டது.
அமைச்சர் அறிவிப்பு
இதன் பின்பு மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அமைச்சர் ராஜகண்ணப்பன் 2021 ல் குதிரை மொழி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.2000 கோடியிலும், நரிப்பையூரில் 120 கோடியிலும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அறிவித்த அறிவிப்போடு கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்க முன் வருமா. 290 கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.