Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு இன்று தீர்ப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு இன்று தீர்ப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு இன்று தீர்ப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு இன்று தீர்ப்பு

ADDED : செப் 18, 2025 03:08 AM


Google News
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு இன்று (செப்.,18) தீர்ப்பு அளிக்கப்படும் என ஊர் காவல்துறை நீதிமன்றம் தெரிவித்தது.

ஜூலை 13ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 7 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து 63 நாட் களாக சிறையில் உள்ள மீனவர்களை நேற்று ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன் மீனவர்களுக்கு நாளை(இன்று) தீர்ப்பு வழங்கப்படும். ஆகையால் நாளை(இன்று) மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து மீன வர்களை மீண்டும் போலீசார் சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us