Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருப்புல்லாணியில் வைகாசி விசாக விழா

திருப்புல்லாணியில் வைகாசி விசாக விழா

திருப்புல்லாணியில் வைகாசி விசாக விழா

திருப்புல்லாணியில் வைகாசி விசாக விழா

ADDED : ஜூன் 04, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 53ம் ஆண்டு வைகாசி விசாக விழா நடக்கிறது. மே 31ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தொடர்ந்து பத்து நாட்களும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்து வருகிறது. ஜூன் 9 காலை பால்குடம், மயில் காவடி உள்ளிட்டவைகளை எடுத்து வந்து நான்கு வீதிகளிலும் வலம் வந்து சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

அன்று இரவு 9:00 மணிக்கு மேல் கோயில் முன்புறம் உள்ள திடலில் நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். மறுநாள் மயில் வாகனத்தில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர். பத்து நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us