Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தஞ்சை, ராமேஸ்வரத்தில் இரு பக்தர்கள் உயிரிழப்பு

தஞ்சை, ராமேஸ்வரத்தில் இரு பக்தர்கள் உயிரிழப்பு

தஞ்சை, ராமேஸ்வரத்தில் இரு பக்தர்கள் உயிரிழப்பு

தஞ்சை, ராமேஸ்வரத்தில் இரு பக்தர்கள் உயிரிழப்பு

ADDED : மார் 19, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்:ராஜஸ்தான் மாநிலம், சிகாரைச் சேர்ந்த ராஜ்தாஸ் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நடந்த ஸ்படிக லிங்க பூஜைக்கு 50 ரூபாய் கட்டண டிக்கெட் எடுத்து வரிசையில் சென்றார்.

அப்போது பக்தர்கள் கூட்ட நெரிசல் இருந்தது. ராஜ்தாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்து இறந்தார். கோவில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

தஞ்சாவூர், பெரிய கோவிலுக்கு, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 68, தன் குடும்பத்துடன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்ய வந்தார். சுந்தரமூர்த்தி கழிப்பறைக்கு சென்றுவிட்டு, கேரளாந்தன் நுழைவு வாயில் பகுதியில், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்செந்துார் கோவிலில் பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், ராமேஸ்வரம், தஞ்சாவூர் கோவில்களில் நேற்று இரு பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us