Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீதான வழக்கு விசாரணை ஜூலை 1 க்கு தள்ளிவைப்பு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீதான வழக்கு விசாரணை ஜூலை 1 க்கு தள்ளிவைப்பு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீதான வழக்கு விசாரணை ஜூலை 1 க்கு தள்ளிவைப்பு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீதான வழக்கு விசாரணை ஜூலை 1 க்கு தள்ளிவைப்பு

ADDED : ஜூன் 18, 2025 01:50 AM


Google News
ராமநாதபுரம்:இந்திய ராணுவ ரகசிங்களை திருட பாகிஸ்தான், இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த மலேசியா, இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜூலை 1க்கு தள்ளி வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி என்மனங்கொண்டான் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சித்தி கலைஹா 52. இவரது அக்காவின் கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல் ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் வேலை செய்த இலங்கை கொழும்புவைச் சேர்ந்த முகமது யாசீர் 40, அவரது மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

யாசீர், அவரது மனைவி உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டானில் சித்திகலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கியிருந்தனர். இவர்கள் இந்தியர்கள் என சித்தி கலைஹா தன் ரேஷன் கார்டில் முகமதுயாசீர் தம்பி என்றும், பாரிகா ரிஸ்மியா மருமகள் என அதிகாரிகளிடம் பொய் தகவல்களை தெரிவித்து சேர்த்துள்ளார். இவர்களுக்கு ஆதார் கார்டும் பெற்று தந்துள்ளார். இந்த போலி ஆதார் கார்டு மூலம் இரு ஜியோ சிம்கார்டுகளை முகமது யாசிர் பெற்று பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவி என்பவரிடம் கொடுத்துள்ளார்.

இந்த சிம்கார்டுகளை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமான ஆர்மி பப்ளிக் ஸ்கூல் என்ற லோகோவை பயன்படுத்தி ராணுவ அதிகாரிகளின் அலைபேசிக்கு மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளனர். அலைபேசிகளை ேஹக் செய்து அதில் உள்ள தகவல்களை அழித்துள்ளனர்.

இது குறித்து தகவல் தெரிந்த கியூ பிரிவு போலீசார் 2021 ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்திகலைஹா, முகமது மிப்லால் மவுலவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முகமது மிப்லால் மவுலவி மட்டும் தலைமறைவானார். மற்ற நான்கு பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பின் ஜாமினில் வெளியே வந்தனர்.

இதுதொடர்பான வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சித்திகலைஹா, முகமதுயாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல் ரஷீத் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் மாவட்ட தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். விசாரணையை ஜூலை 1 க்கு நீதிபதி மெஹபூப் அலிகான் தள்ளிவைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us